கல்லூரி பேராசிரியையின் பின்னணியில் இருப்பது யார்? - வீடியோ !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
அருப்புக் கோட்டை யில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள் கிழமை கைது செய்யப் பட்டார்.
விருது நகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியை யாக ஆத்தி பட்டியைச் சேர்ந்த நிர்மலா தேவி (46) பணிபுரிந்து வருகிறார்.
இவர், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங் குகள் முதலிய வற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம்.

இந்நிலை யில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை 

செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு, பல்கலைக் கழக அதிகாரிகள் எதிர் பார்ப்பதை நிறை வேற்றினால் 

மதிப்பெண், பணம், அரசு வேலை எளிதில் கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினாராம்.

இது குறித்து, சம்பந்தப் பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 19-ல் கல்லூரி நிர்வாகத் திடம் உதவிப் பேராசிரியை மீது புகார் தெரிவித் தனர். 
இதை யடுத்து பேராசிரியை நிர்மலா தேவியிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி மார்ச் 21-ல் அவரை பணியிடை நீக்கம் செய்தது.

இந்நிலை யில், உதவி பேராசிரியை மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசாந்த், 

இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரை ஞருமான நிர்மலா ராணி 
மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள் கிழமை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாணவி களிடம் தவறான நோக்கில் பேசிய உதவிப் பேராசிரியை குறித்து கல்லூரியில் திங்கள் கிழமை கூடுதல் துணைக் காவல் கண்காணிப் பாளர் மதி, அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா 

மற்றும் வட்டாட்சியர் சிவகார்த்தி காயினி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆத்தி பட்டியில் உள்ள நிர்மலா தேவி வீட்டிற்கு விசாரிக்க சென்ற போது வீடு பூட்டப் பட்டிருந்தது.
அவரது செல்லிடப்பேசி மூலம் அவர், வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வெளி க்கதவு மற்றும் வீட்டின் உள்புறமாக பூட்டி யிருப்பது தெரிந்தது.

இதை யடுத்து போலீஸார், அவரது உறவினர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப் பட்டதை நிர்மலா தேவிக்கு தெரியப் படுத்தினர். 

பின்னர் வேறு வழியின்றி உதவிப் பேராசிரியை கதவை திறந்து வெளியில் வந்த போது, அவரை போலீஸார் கைது செய்தனர்.

பேராசிரியை மீதான புகாரை விசாரிக்க 5 பேர் குழு அமைப்பு: பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு 
அமைக்கப் பட்டுள்ள தாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் பி.பி. செல்லத்துரை திங்கள் கிழமை கூறினார்.

புதுதில்லியில் பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் கருத்தரங் கிற்குச் சென்றுள்ள துணை வேந்தர் பி.பி. செல்லத்துரை யிடம் செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியது:

அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி தன்னாட்சி அதிகா ரமுடையது. அதற்கும் பல்கலைக் கழகத்து க்கும் சம்பந்த மில்லை. 

ஆனால், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை யின் நடவடிக் கைகள் சரியல்ல. அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். காமராஜர் பல்கலைக் கழகத்தின் அறிவியல் கண் காட்சியில் 
நூற்றுக் கணக்கான பேராசிரி யர்கள் பங்கேற் றுள்ளனர். அதில் அவர் யாரைக் குறிப்பிடு கிறார் எனத் தெரியவில்லை.
அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை மீது விசாரணை நடத்திட பல்கலைக் கழகத்தின் சார்பில் 

கணிதத் துறை பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு நியமிக்கப் பட்டுள்ளது.

அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார். 

அந்த குழுவில் கணிதத்துறை பேராசிரியர் லில்லிஸ் திவாகர், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆண்டியப்பன், 

பேராசிரி யைகள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் இடம் பெற்றிருப் பதாக பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

அருப்புக் கோட்டை கலைக் கல்லூரி வளாகத்தில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை கோரி  திங்கள் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவிகள்.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கல்லூரி மாணவி களை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை மீது நீதிமன்ற கட்டுப் பாட்டில் விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.

இது குறித்து அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:

அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவி களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியை யும், கோபத்தை யும் ஏற்படுத்தி யுள்ளது.

தமிழக அரசு அவர் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். உயர் கல்வித் துறை 
மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் உள்பட அனைவரும் விசாரணை வளையத்து க்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தன் வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற த்தின் கட்டுப் பாட்டில் நடைபெறும் வகையில், விசாரணை க்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த விசாரணை முறை யாக நடைபெறும் வகையில், தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 

மேலும், விசாரணை முடியும் வரை ஆளுநரால் நியமிக்கப் பட்ட துணை வேந்தர்கள், பல்கலைக் கழக அதிகாரிகள் ஆகியோரை பணியி லிருந்து விலக்கி வைக்க வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை: அன்புமணி ராமதாஸ்​

கல்லூரி மாணவி களிடம் உதவிப் பேராசிரியை பாலியல் ரீதியாக பேரம் பேசிய தாகக் கூறப்படும் சம்பவம் குறித்து 

சிபிஐ விசாரணை க்கு உத்தர விட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

விருதுநகர் மாவட்டத்தி லுள்ள தனியார் கலை - அறிவியல் கல்லூரி யில் பணியாற்றும் நிர்மலா தேவி என்ற உதவிப் பேராசிரியை, 

சில பெரிய மனிதர்க ளின் பாலியல் தேவை களுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவி களைக் கட்டாயப் படுத்தும் 

குரல் பதிவு வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.

இதன் பின்னணி யில் உள்ள பெரிய மனிதர்களை வெளிக்கொண்டு வரும் வகையில், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித் துள்ளார்.
Tags: