அவள் சொன்ன வார்த்தை ஆத்திரத்தை ஏற்படுத்தியது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
குழந்தை இல்லாதது பற்றிய தகராறில்... ஆண்மை யற்றவன் என்று தன்னைக் கூறிய தால், மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததாகப் பால கணேஷ் போலீஸாரிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
அவள் சொன்ன வார்த்தை ஆத்திரத்தை ஏற்படுத்தியது !
சென்னை, வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிரு ப்பில் குடியிரு ந்தவர், பால கணேஷ். இவரின் மனைவி ஞானப் பிரியா. 

இவர், கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார். பால கணேஷும் கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் கழிவறை யில் மயங்கிக் கிடந்தார். 
அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காகச் சேர்த்தனர். ஞானப் பிரியாவின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினும் கொள்ளை யடிக்கப் பட்டிருந்தது. 

இதனால், நகைக் காகக் கொலை நடந்திருக் கலாம் என்று போலீஸார் சந்தேகி த்தனர். ஆனால், அது தொடர் பான கோணத்தில் விசாரித்த போது, போலீஸா ருக்கு எந்தத் தகவலும் கிடைக்க வில்லை. 
இதனால், போலீஸாரின் சந்தேகம் பால கணேஷ் மீது விழுந்தது. அவரிடம் பல கோணங் களில் விசாரணை நடத்தப் பட்டது. 

தற்போது, இந்தச் சம்பவ த்தில் திடீர் திருப்பம் ஏற்பட் டுள்ளது. அதாவது, குழந்தை இல்லாத தால் மனைவியைக் கொலை செய்ததாகப் பால கணேஷ் போலீஸா ரிடம் தெரிவித் துள்ளார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகை யில், "திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை. 

இதனால், இருவரும் மன வேதனை யில் இருந்து ள்ளனர். அதற்கான சிகிச்சை யையும் மேற்கொண்டு வந்தனர். 
சிகிச்சை யில் பால கணேஷுக்கு மருத்துவ ரீதியாகச் சில சிக்கல்கள் இருந்தன ஞானப் பிரியாவு க்குத் தெரிய வந்தது. 

குழந்தை இல்லாத தற்குக் காரணம் பால கணேஷ் தான் என்று தெரிந்ததும், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட் டுள்ளது. 

கடந்த 4-ம் தேதி இரவும் கணவன் மனைவிக் கிடையே தகராறு ஏற்பட் டுள்ளது. அப்போது, 'நீ ஆண்மை யற்றவன்' என்று பால கணேஷை ஞானப் பிரியா திட்டிய தாகச் சொல்லப் படுகிறது. 
இதனால் ஆத்திர மடைந்த பாலகணேஷ், அவரின் நண்பர் மனோஜ் உதவியுடன் ஞானப் பிரியாவைக் சுத்திய லால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். 

பிறகு, நகைக்காகக் கொலை நடந்த தாகப் போலீஸாரை நம்ப வைக்க தங்கச் செயினை எடுத்துச் சென்றுள்ளார் மனோஜ்.

இவரும் சிவன் கோயிலில் தற்காலிக குருக்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து, இருவரை யும் கைது செய்துள்ளோம். 

இவர்களிட மிருந்து 15 சவரன் நகை களையும் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.
Tags: