சென்னையில் சிறுமி பலாத்காரம் - நடந்தது என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தந்தை வெளியூரில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். 
தாயும், சிறுமியும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வர, அந்த சிறுமியின் மூத்த சகோதரி டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். 

வீட்டிலிருந்து பள்ளி வாகனத்தில் சென்று வரும் அந்த சிறுமி பள்ளி முடிந்து தானாகவே

வாகனத்தில் இருந்து இறங்கி அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் வழியாக வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

அப்படி மதிய நேரங்களில் தனியாக சென்ற சிறுமியை கடந்த ஜனவரி மாதம் முதலில் 66 வயதான

லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் பாலியம் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த கொடுமை அந்த சிறுமிக்கு மற்றவர் களால் அடுத்தடுத்து அரங்கேற்றப் பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் படித்து வந்த அந்த சிறுமியின் சகோதரரி விடு முறைக்காக சென்னை வந்துள்ளார்.

எப்போதுமே சகோதரியுடன் பாசம் காட்டும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை களை சைகை

மூலமாக புரிய வைத்துள்ளா தாகத் தெரிகிறது. இதை யடுத்து அந்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது. 

அடுத்து, சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றது அந்த குடும்பம்.  அந்த பிஞ்சை

பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் மருத்துவ பரிசோதனை யில் கண்டு பிடிக்கப் பட்டது.

சிறுமியின் பயத்தைப் போக்கி அருக்கு தெரிந்த மொழியில் பேச,  அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டில் பணிபுரியும்

ரவிக்குமார் என்ற 66 வயது முதியவர் தான், சிறுமிக்கு முதலில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

அவர், வெளியில் இருந்து 2 பேரை அழைத்து வந்து, சிறுமியை  அவர்களுக்கு இரை யாக்கியதும் தெரிய வந்தது.

இதை யடுத்து அடுக்குமாடி குடியிருப்பிற்கு விரைந்த போலீசார், ரவிக்குமாரிடம்  விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்கு மூலத்தில், சிறுமியை 18 பேருக்கும் அதிகமானோர் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதை யடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்... நன்றி.. தந்தி.