பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் ’செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை அம்மாநில பெண்கள் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் சோம்யா குர்ஜார் ஆகியோர் பார்வையிட சென்றனர். 
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு !
அப்போது, ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. 

மகளிர் ஆணைய தலைவர் சுமர் ஷர்மாவும் இந்த செல்பி புகைப் படத்தில் இடம் பெற்றுள்ளார். ஆனால் செல்பி எடுத்ததை கவனிக்க வில்லை என்று கூறிவிட்டார். 

இந்நிலையில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணைய உறுப்பினரு க்கு ஆணைய தலைவர் சுமன் ஷர்மா உத்தர விட்டார். 

இப்பிரச்சனை பெரும் சர்ச்சையாகிய நிலையில் தேசிய பெண்கள் ஆணையம் தலை யிட்டது. 
பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !
ராஜஸ்தான் பெண்கள் ஆணை யத்திற்கு நோட்டீஸ் விடுத்த தேசிய பெண்கள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் செல்பி எடுத்த தலைவர் மற்றும் உறுப்பினருக்கு சம்மன் அனுப்பியது. 

இதனைத் தொடர்ந்து ’செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய பெண்கள் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)